""நல்லொழுக்கம் இல்லாதோர் இளைஞர்களுக்கு நல்ல புத்தி சொல்லலாமா'' என ராமகிருஷ்ணரிடம் ஒருவர் கேட்டார். அதற்கு பரமஹம்சர், ""ஒழுக்கதைதக் கடைபிடிக்காவிட்டால் அது அவர்களுக்குத்தான் நஷ்டம்! சொல்வதில் நன்மை இருந்தால் யாராயிருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். அழுக்காக இருக்கும் துடைப்பம்கூட வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்கிறதே!'' என்றார் சிரித்துக்கொண்டே.