பொன்மொழிகள்!
நமது உண்மையான சேமிப்பு வங்கி ஒழுக்கம்தான்! ஒழுக்கம் மட்டுமே!
* நமது உண்மையான சேமிப்பு வங்கி ஒழுக்கம்தான்! ஒழுக்கம் மட்டுமே!
- ஜிம் நில்லர்
* பணிவு பலவீனம் அல்ல....அதுவே பலம்!
- சுவாமி சிவானந்தா
* நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் நீ வெறுக்கும் மனிதர்களிடன் இருக்கக்கூடும்!
- சுவாமி விவேகானந்தர்
* முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்....பின் எஜமானனாகும் தகுதி தானே வரும்!
- சுவாமி விவேகானந்தர்
* உழைப்பு காலத்தைப் பொன்னாக்குகிறது! சோம்பலில் பொன் காலமாகிவிடுகிறது!
- யாரோ
* அறிஞர்கள் சிந்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகிறார்கள்!
- கன்பூசியஸ்
* இதயத்தை சுத்தப்படுத்து! இறைவனை அழை! நிச்சயம் வருவான்!
- பைபிள்
* எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்! அப்படி சரியாகாவிட்டால் அது "கடைசி' யல்ல!
- யாரோ
* அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது....நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது!
- அரிஸ்டாட்டில்