பூமி
எதையும் தாங்கும் பொறுமைக்கு இதனை உவமை கூறுவார்!
எதையும் தாங்கும் பொறுமைக்கு
இதனை உவமை கூறுவார்!
புதையும் விதைக்கு உயிர் தரும்
புனித தெய்வம் பூமிதான்!
ஓங்கி வளரும் தாவரம்
உயர்ந்து நிற்கும் கோபுரம்
Advertisement
தாங்கும் பூமி மடியில்தான்
தூங்கும் நிறையச் செல்வங்கள்!
ஊற்றும் உண்டு பூமிக்குள்!
உழைப்புத் திறவு கோலினால்
பூட்டு திறக்கும் பூமியில்
பொன்னும் மணியும் காணலாம்!
கரும்பு விளையும் உழவினால்!
கனத்த மலையின் மடியிலே
இரும்பு விளையும் இயற்கையாய்!
எண்ணெய் இருக்கும் பூமிக்குள்!
உயிர்கள் நீங்கும் உடல்களை
உலகம் ஒதுக்கி வைப்பினும்
துயில்வதற்கு பூமிதான்
தொட்டிலாகி இடம் தரும்!
காந்த சக்தி இருப்பதாய்
கண்டறிந்தார் நியூட்டனும்!
சாந்தம் மிக்க பூமியோ
தன்னைத் தானே சுற்றுமாம்!
பள்ளி நூலில் புவியியல்
பாடம் உண்டு விளக்கமாய்!
புள்ளி விவரம் வேண்டுமா?
புத்தகத்தில் படிக்கலாம்!