முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்!

திருப்தி உடையவர்களிடத்தில் சிறிது பொருள் இருந்தாலும் பெரும் செல்வம் உடையவராய் உணர்வர். 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 10:35 AM
பகிர்:

* திருப்தி உடையவர்களிடத்தில் சிறிது பொருள் இருந்தாலும் பெரும் செல்வம் உடையவராய் உணர்வர். 

* மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது ஒரு பெரிய தானத்திற்கு ஒப்பான செயலாகும்.

* இன்முகம் உடையவர் உற்சாகத்தோடு இருப்பதோடு மற்றவர்களின் உதடுகளிலும் புன்னகை தவழச் செய்கிறார்.

Advertisement

* எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்.

* நல்ல முயற்சிகள் மகிழ்ச்சியைத் தரும். அந்த முயற்சிகள் பலன் தரும்போது மகிழ்ச்சி மேலும் அதிகமாகும்.

* சில வேளைகளில் புன்னகை என்பது பாலைவனத்தில் ஒரு துளி நீர் போன்றது!

* கஷ்டமான சூழ்நிலையை மகிழ்ச்சியுடனும் புன்முறுவலுடனும் எதிர்கொள்ளும் மனிதன் மகானாக மதிக்கப்படுகிறான். 

* யாராவது உங்களை தகிக்கும் தணல் போன்ற கோபத்துடன் பேசினால் அன்பெனும் தண்ணீரால் அந்த நெருப்பில் ஊற்றுங்கள்!

* அன்பான வார்த்தையானது பலரின் வேதனை மிக்க இதயங்களை குணமாக்கவல்லது!
தொகுப்பு: டி.எஸ்.சிவானந்தம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.