பாப்பா பாட்டு தரும் சேதி!
முறுக்கிய மீசை! சுடர் ஒளிர் விழிகள்!முண்டாசுக் கவி நம் பாரதி - பயந்து
முறுக்கிய மீசை! சுடர் ஒளிர் விழிகள்!
முண்டாசுக் கவி நம் பாரதி - பயந்து
ஒடுங்கிய பாரதர் உரிமைக் குரலை
உரத்துப் பாடிய மாகவி!
தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டன்பும்
இரண்டும் இரண்டு விழிகளாம்! - வெறும்வாய்ப்
பேச்சு, பொய், ஜாலம், நடிப்பின்றி
வாழ்நாள் முழுதும் ஒழுகினார்!
பூனைக் கதையைப் புரியும் விதமாய்ப்
பாப்பாப் பாட்டில் பாடினார்! - தன்
மானம், ஒற்றுமை மிகுந்த சகோதரர்
நாம்! என மனதில் உணர்த்தினார்!
Advertisement
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல் எனப்
பிஞ்சுகள் மனதில் தூவினார்! - மறை
வள்ளுவர், கம்பர், இளங்கோ போலவே
மாகவி எவர்?... என வினவினார்!
காலையில் எழுதல், கற்றல், பாட்டென
சிறுவர்கள் செவிகளில் ஓதினார்! - அந்தி
மாலைப் பொழுதில் ஓட்டமும், ஆட்டமும்
உடலுக்கு உறுதி எனக் கூறினார்!
தேசம், மக்கள், மொழிமேற் பற்றிவை
தெய்வபக்தியின் மேலதாம்!- எனும்
நேசம் எல்லோர்க்கும் வேண்டும் நிச்சயம்! - இது
பாப்பாப் பாட்டின் சேதியாம்!