சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

வானவில் - பேருக்கு ஏற்றாற்போல வில் போல வளைந்து காணப்படுவது ஏன்?

ரொசிட்டா


கேள்வி: வானவில் - பேருக்கு ஏற்றாற்போல வில் போல வளைந்து காணப்படுவது ஏன்?

பதில்:   வானவில் எப்படி உண்டாகிறது? சூரியனின் ஒளிக்கதிர்கள் மழைத்துளிகளின் மேல் படும்போது நிறப்பிரிகை ஏற்பட்டு வண்ணவண்ணமாக வானவில் தோன்றுகிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.

சூரியனால் இது ஏற்படுவதால் சூரியனின் வடிவமான வட்டத்தை இது பிரதிபலிக்கிறது. அதனால்தான் வானவில் அரைவட்டமாக வளைந்து காணப்படுகிறது.

அதெல்லாம் சரிதான், நீங்கள் சொல்வது போல சூரியனின் வட்ட வடிவத்தைப் பிரதிபலிக்கிறது என்றால் வானவில் ஏன் அரைவட்டமாக இருக்கிறது? முழு வட்டமாகத்தானே தோன்ற வேண்டும் என்று கேட்கிறீர்களா? நீங்கள் யோசிப்பது சரிதான். ஆனால்...

நாம் பூமியில் இருப்பதால் சூரியனின் வடிவம் பாதியாக மறைக்கப்படுகிறது. இதனால்தான் வானவில் அரைவட்டமாக நமக்குத் தோன்றுகிறது. வானவில் முழு வட்டமாகத்தான் இருக்கும், இருக்கிறது.

இந்த முழு வட்ட வானவில்லைக் காண வேண்டும் என்றால் நீங்கள் வானில் இருக்க வேண்டும். விமானத்தில் பறக்கும்போது  வானவில் தோன்றி இந்த முழு வட்ட வானவில்லை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT