சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

DIN

கேள்வி:
 மிகவும் ஆழமான கடலுக்கு அடியில் அப்படி என்னதான் இருக்கிறது, இருக்க முடியும்? ஏதாவது கண்டுபிடித்திருக்கிறார்களா?
 பதில்: மிகவும் ஆழமான கடலுக்குள் நாம் இதுவரை பார்த்திராத பல வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இவை அனைத்துக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். அத்தனை பெயர்களும் வாயில் நுழையாதவை. ஆகவே பெயர்களை விட்டு விடுவோம்.
 இவ்வளவு ஆழத்தில் இருக்கும் இந்த உயிரினங்கள் எதைச் சாப்பிட்டு வாழ்கின்றன? அந்த ஆழத்தில் இருக்கும் சில விநோதச் செடிகளால் பச்சையம் தயாரிக்கக் கூட முடியாது. ஏனென்றால் சூரிய ஒளி அங்கே படுவதே இல்லை. இங்குள்ள உயிரினங்களுக்கு உணவு - அந்த வினோதச் செடிகளின் அழுகிய இலைகளும் மக்கிய வேர்களும்தான். அப்புறம் இறந்த உயிரினங்களின் மக்கிய பாகங்களும்தான். பாவம் என்றுகூடச் சொல்ல முடியாது. ஆனாலும் இவையும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
 மிகவும் ஆழமான கடல் பகுதி "சேலஞ்சர் டீப்' என்று அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலில் உள்ளது. இதன் ஆழம் எவ்வளவு தெரியுமா? 10,904 மீட்டர்கள் (36,070 அடிகள்).
 -ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 கடலின் ஆழமான பாகத்தின் தரையை மனிதனால் தொட்டு விட முடியுமா?
 தொட்டிருக்கிறார்களா?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT