துறவு
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM
அறத்துப்பால் - அதிகாரம் 35 - பாடல் 7
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
- திருக்குறள்
தன்னை மட்டும் கருதியே
தானே என்று வாழ்பவர்
தனக்கு மட்டுமே தேவையென்று
பிறரை வருத்தும் கொடியவர்
Advertisement
தற்காலம் நன்றாய் வாழ்ந்தாலும்
பிற்காலம் துன்பங்கள் வந்தடையும்
பற்றினை விடாமல் வைத்திருந்தால்
பற்றிடும் துன்பங்கள் தொடர்ந்திடுமே!
-ஆசி.கண்ணம்பிரத்தினம்