கடி
""நான் பாஸ் பண்ணா சைக்கிள் வாங்கித் தரேன்னு எங்க அப்பா சொன்னார்''""சரி, ஒரு வேளை நீ பெயில் ஆயிட்டா?''""டிரைசைக்கிள் வாங்கித் தரேன்னு சொல்லிட்டாரு!''
""உங்களுக்கு எந்த ஊரு ...?''
""தென்காசி பக்கம்...!"*
""அப்படியா ...?''
""உங்களுக்கு....?''
""தென்காசி தூரம்....!''
சுரேஷ் உமா, சென்னை.
""என்னடா இது.... ஆச்சரியமா இருக்கே!....
...ஆடிக்கு ஒருத்தன், அமாவாசைக்கு ஒரு
த்தன்னு வருவீங்க.....இன்னைக்கு
ரெண்டு பேரும் சேர்ந்தே வந்திருக்கீங்க ?''
""இன்னைக்கு ஆடி அமாவாசை சார் !''
அசோக் ராஜா, திருச்சி - 620015
""தம்பி ஏன்டா அழறான்?...., அவன் கேக்கிறதைக் கொடுடா''
""அவன் கேட்டதைக் கொடுத்ததால்தான்மா அவன் அழறான்!...''
"" என்ன கேட்டான்!''
"" என் தட்டிலே இருந்த பச்சை மிளகாயைக் கேட்டான்மா !
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
""நான் பாஸ் பண்ணா சைக்கிள் வாங்கித் தரேன்னு எங்க அப்பா சொன்னார்''
""சரி, ஒரு வேளை நீ பெயில் ஆயிட்டா?''
""டிரைசைக்கிள் வாங்கித் தரேன்னு சொல்லிட்டாரு!''
எஸ்.கார்த்திகா, ரத்னபுரி.
""எங்க அப்பா "ஃபோர்மேனா' வேலை செய்யுறார்!''
""எங்கப்பா "சிங்கள் மேன்' வேலை தான் செய்யுறார்!''
கி.ரவிக்குமார், நெய்வேலி - 607803.
""உயிர் எழுத்துக்கள் எத்தனை?''
""மூன்று எழுத்துக்கள் சார்!..... உ.....யி....ர்!''
அ.யாழினி பர்வதம், சென்னை - 600078.