முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

பாலாற்றின் நடுவே கருப்பு மீன் நெளியுது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:


1. பாலாற்றின் நடுவே கருப்பு மீன் நெளியுது...
2.அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதி நாள் குறைவாள். பாதி நாள் வளர்வாள்...
3. அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது...
4.  பிறக்கும்போது வால் உண்டு. இறக்கும்போது வால் இல்லை...
5. படுத்துத் தூங்கினால் கண் முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும்...
6. இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை, காய் உண்டு விதையில்லை, கன்று உண்டு பசு இல்லை...
7. அதட்டுவான், அலறுவான், ஆனால், கோட்டையை விட்டு வரமாட்டான்...
8. விரல் இல்லாமலே ஒரு கை...
9. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான்...


விடைகள்


1. கண்கள்  
2.  நிலா  
3. தண்ணீர் 
4.  தவளை  
5.  கனவு  
6.  வாழை
7.  நாக்கு  
8.  உலக்கை
9.  நாற்காலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.