சுற்றம் தழால்
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீ ரார்க்கே உள.
பொருட்பால் - அதிகாரம் 53 - பாடல் 7
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீ ரார்க்கே உள.
- திருக்குறள்
இரையைக் கண்ட காகங்கள்
அதனை மறைக்க எண்ணாமல்
சுற்றம் தேடி அழைத்திடும்
அதன் பிறகே உண்டிடும்
எதையும் மறைத்து வைக்காமல்
இயன்ற உதவி செய்பவர்க்கு
காக்கை போலச் சுற்றத்தார்
ஆக்கம் தந்து உதவுவார்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்