விடுகதைகள்
சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால் பளிச்சிடுவான்.
சிறுவர்மணிவிடுகதைகள்
சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால் பளிச்சிடுவான்.
1. சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால் பளிச்சிடுவான்...
2. ஒரு கரண்டி மாவில் ஊருக்கே தோசை...
3. குண்டுக் குள்ளனுக்குக் குடுமி நிமிர்ந்து நிற்குது...
4. தரையில் இருப்பான், தண்ணீரில் படுப்பான்...
5. வம்புச் சண்டைக்கு இழுத்தாலும் வாசல் தாண்ட மாட்டான்...
6. நீல நிற மேடையிலே கோடி மலர் கிடக்குது. எடுப்பாரும் இல்லை, தொடுப்பாரும் இல்லை...
7. எட்டாத தூரத்திலே எவரும் இல்லாத காட்டிலே எழிலான பெண் ஒருத்தி இரவெல்லாம் சிரிக்கிறாள்...
8. ஊருக்கு அழகு எது என்றேன்... ஒன்றுடன் சேர்த்து ஐந்து என்றார்...
9. சித்திரையில் சிறு பிள்ளை, வைகாசியில் வளரும் பிள்ளை...
விடைகள்
1. முத்து,
2. நிலா,
3. தேங்காய்
4. படகு,
5. நாக்கு,
6. விண்மீன்கள்
7. நிலவு,
8. ஆறு
9. பனம்பழம்