ஒப்புரவு அறிதல்
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM
அறத்துப்பால் அதிகாரம் 22 பாடல் 7
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
- திருக்குறள்
பெருந்தன்மை கொண்டவர்
கையில் செல்வம் சேர்ந்தால்
எல்லோருக்கும் பயன் தரும்
எல்லா நன்மையும் தந்திடும்
Advertisement
மருந்து மரத்தின் வேர் இலை
பட்டையினால் மனிதரின்
ஒவ்வொரு உறுப்பின் நோய் தீரும்
உயர்ந்தோர் அதைப்போல் உதவுவர்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்