பயனில சொல்லாமை
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:09 PM
அறத்துப்பால் - அதிகாரம் 20 - பாடல் 7
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று.
- திருக்குறள்
நயமில்லாத சொற்களை
நன்மையில்லாமல் பேசுவார்
நாக்கு என்ற சதையினை
தேவையின்றி ஆட்டுவார்
Advertisement
நயமில்லாமல் சொன்னாலும்
பயனில்லாமல் பேசுதல்
சான்றோர்க்கு அழகு ஆகாது
பயனோடு பேசப் பழகுவோம்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்