சிறுவர்மணி

முயலின் குட்டிக் கரணம்!

மயிலை மாதவன்

ஒருவர் தன் வீட்டில் முயல்களை வளர்த்துக்கொண்டு இருந்தார். அதில் ஒரு முயல் துருதுரு என்றிருந்தது! அதை அவர் குட்டிக்கரணம் போட வைத்துப் பழக்குகிறார். அந்தக் குட்டி முயல் மூன்று குட்டிக்கரணம் போட்டதும் அவர் அதற்கு ஒரு கேரட் தருவார். 

வீட்டில் யாராவது விருந்தாளி வரும்போது அவர்களுக்குத் தன் கொல்லையில் வளர்க்கும் முயல்களைக் காண்பிப்பார். இந்த துருதுரு முயலைக் கூப்பிட்டு விருந்தாளிமுன் மூன்று குட்டிக்கரணம் போடச் செய்வார். விருந்தாளிகள் ஆச்சரியப்படும்போது இவர் போனஸாக முயல்குட்டிக்கு ஒரு கேரட் தருவார்.

அந்தக் குட்டி முயல் தன் சக முயல்களிடம், ""இந்த ஆள் ரொம்ப தமாஷான ஆள்!.... வேடிக்கையைப் பார்!.... நான் குட்டிக்கரணம் போடுகிறேன்.... இவன் ஓடி வந்து கேரட் தருவான் பாருங்க!'' என்றது. 

மூன்று குட்டிக்கரணம் போட்டது முயல்! ஓடி வந்து அவர் கேரட் கொடுத்தார். ஏனைய முயல்கள் அந்த ஆள் செய்யும் சர்க்கஸை ரசித்து மகிழ்வது வழக்கமாகிவிட்டது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT