முகப்பு
சிறுவர்மணி

நினைவுச் சுடர் !: அன்புச் சிறை!

சுதந்திரப் போராட்ட காலம். சுப்பிரமணிய சிவா இந்திய விடுதலைக்கான போராட்டங்களில் ஈடுபடுகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

சுதந்திரப் போராட்ட காலம். சுப்பிரமணிய சிவா இந்திய விடுதலைக்கான போராட்டங்களில் ஈடுபடுகிறார்.  எரிச்சலடைந்த ஆங்கிலேய அரசு, சுப்பிரமணிய சிவாவைக் கைது செய்கிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை சுப்பிரமணிய சிவாவின் ஆப்த நண்பர். அவருடன் பல போராட்டங்களில் பங்கேற்றவர். ஆங்கிலேய அரசு வ.உ.சிதம்பரனாரையும் கைது செய்கிறது. 

வ.உ.சி சட்டம் படித்தவர், விவேகமாகப் பேசக்கூடியவர். மக்களிடம் பெரும் செல்வாக்கு உள்ளவர்.

வ.உசிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

நீதிபதி, வ.உ.சி க்கு மட்டும் ஜாமீன் வழங்க அனுமதித்தார். ஆனால் சுப்பிரமணிய சிவாவைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

வ.உ.சி யோ, தனக்குக் கிடைத்த ஜாமீனை மறுத்துவிட்டார்! தன் நண்பர் சுப்பிரமணிய சிவாவிற்கு ஜாமீன் தராவிட்டால் தானும் அவருடன் சிறை செல்லத் தயார் என்றும் கூறிவிட்டார். 

நண்பர்கள் இருவரும் சிறையிலேயே இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.