கயமை
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு.
பொருட்பால் - அதிகாரம் 108 - பாடல் 7
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லாதவர்க்கு.
- திருக்குறள்
கொடுத்து உதவ எண்ணாமல்
இறுக்கமாக வாழ்பவர்
உண்டு மீதியிருந்தாலும்
ஒருவருக்கும் கொடுத்திடார்
Advertisement
வன்முறையால் மிரட்டி
அடித்துக் கேட்பவரிடத்திலே
அனைத்தும் பறி கொடுப்பார்கள்
அப்போதுதான் உணர்வார்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்