சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் திருமந்திரம் நூலை இயற்றியவரின் பெயர் கிடைக்கும்.
எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்...
1. நவமணிகளில் ஒன்று...
2. முகத்திலும் இருக்கும், துணியிலும் இருக்கும்...
3. நமது தேசியக் கொடியில் உள்ளது...
4. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று...
5. விநாயகருக்கான திருவிழா, விநாயகரைத்தான் காணோம்...
Advertisement
கட்டங்களில் வரும் சொற்கள்
1. ரத்தினம்,
2. சுருக்கம்,
3. மூவர்ணம்,
4. சிலம்பம்,
5. சதுர்த்தி.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : திருமூலர்