அங்கிள் ஆன்டெனா
வானவில் இரவில் தோன்றுமா? தோன்றினாலும் மனிதக் கண்களுக்குத் தெரியுமா?
கேள்வி: வானவில் இரவில் தோன்றுமா? தோன்றினாலும் மனிதக் கண்களுக்குத் தெரியுமா?
பதில்: இது கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அதிசயமாக இருந்தாலும் வானவில் இரவில் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்படி இரவிலும் தோன்றியிருக்கிறது.
இந்த அதிசய நிகழ்வு தோன்றுவதற்குத் தேவையானவை மழை அல்லது பனிமூட்டம் அல்லது தேவையான அளவு ஈரப்பதம் (காற்றில்).
Advertisement
மேலும், நிலா மிக அதிக அளவு சூரியனின் ஒளியை வாங்கிப் பளீரென்று மின்ன வேண்டும்.
இவையெல்லாம் இரவில் நடந்தால் வானவில் தோன்றும். அது மனிதக் கண்களுக்கும் தோன்றும். இதைப் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். உங்களுக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
இரவில் இப்படித் தோன்றும் வானவில்லுக்கு "மூன் பெள' (நிலா வில்) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.