திமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள்! இபிஎஸ் விமர்சனம்
அதிமுக திட்டங்கள் குறித்து மு.க. ஸ்டாலினுடன் விவாதிக்கத் தயார் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து...
அதிமுகவைச் சேர்ந்தவர்களே திமுகவில் வேட்பாளர்களாக போட்டியிட்டு வருவதாகவும், திமுக தேய்ந்து வருவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 7) விமர்சித்தார்.
உளுந்தூர்பேட்டையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 7) எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்.
Advertisement
கிராமம், நகரம் என தமிழ்நாட்டில் எங்குபார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் அதற்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். போதை ஆசாமிகளால் நாளும் குற்றச் செயல்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது.
திமுகவின் ஏவல் துறையாக காவல் துறை செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும். தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள் ஏன்? மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன.
நாட்டு மக்களைப் பற்றி மு.க. ஸ்டாலினுக்கு கவலையில்லை. தனது குடும்ப வளர்ச்சி பற்றி மட்டுமே சிந்தனை. நவீன முறையில் ஊழல் செய்யும் அரசாங்கம் திமுக உடையது. திமுக என்பது கட்சி அல்ல. கார்ப்பரேட் கம்பெனி. கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வரலாம்.
கிளைச் செயலாளர் கூட அதிமுகவில் பொதுச்செயலாளர் ஆக முடியும். திமுகவில் அப்படி நடக்குமா? 2021 முதல் அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் திமுகவில் அமைச்சர்களாக இருந்தனர். தற்போது அதிமுகவில் இருந்து 18 பேர் திமுகவுக்குச் சென்று போட்டியிடுகின்றனர். திமுக தேய்ந்து வருகிறது
கருணாநிதியின் அடையாளத்தை வைத்து கட்சி நடத்துகிறார் மு.க. ஸ்டாலின். நான் 51 ஆண்டுகாலம் யாரையும் விமர்சித்துப் பேசியதில்லை. ஆனால், மு.க. ஸ்டாலினின் மகன் என்னை பேச வைக்கிறார் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.