முகப்பு
சிறுவர்மணி

நினைவுச் சுடர்! எப்படி சாப்பிட்டால் சுவை...?

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

"ரொட்டியை எப்படி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?'' என்று குரு, தன் சீடர்களிடம் கேட்டார்.

"வெண்ணெய் தடவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு சீடன்.

"ஜாம் தடவி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்...'' என்றான் இன்னொருவன்.

"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' என்றான் மற்றொருவன்.  "தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' என்றான் வேறொருவன். இப்படிப் பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக மாணவன் ஒருவன் எழுந்து, "ரொட்டியை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் குருவே'' என்று கூறினான். இதைக் கேட்ட குரு மிகவும் மகிழ்ந்து அந்த மாணவனைப் பாராட்டினார். அவ்வாறு பாராட்டு பெற்ற மாணவர் "நரேந்திரன்' என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் "வீரத்துறவி' எனப் போற்றப்பட்ட சுவாமி விவேகானந்தர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.