சிறுவர்மணி

ஆல்போல் வாழணும்

புலேந்திரன்

மலையைப் போல ஆல மரமும்
    அழகாய்த்  தோன்றுதே - அது
தலைக்கு மேலே கிளைகளை விரித்தே
    குடைபோல் நிற்குதே!

தன்னை நாடி பறந்தே வந்திடும் 
    பறவைகள் அனைத்துமே - மேலே
தங்கிக் கொள்ள தனது கிளையில்
    இடத்தைச் கொடுக்குதே! 

குட்டிக் குட்டியாய் ஆல மரத்தின்
    பழங்கள் இருக்குதே!-அவற்றை
கொத்திக் கொத்தி பறவைகள் தின்றே
    பசியைப்போக்குதே!

ஆல இலையும் ஆடு தின்ன
    உணவாய் ஆகுதே! - பல்லும்
ஆலம் விழுதால் துலக்கி வந்தால்
     உறுதி யாகுதே!

சிறுவர் கட்டி ஊஞ்ச லாட
    சிறிய  விழுதுமே! - தரையில் 
பெரிய விழுதும் ஊன்றி நின்றே
     மரத்தைத் தாங்குமே!

வாழ்ந்தால் ஆல மரத்தைப் போல
    வாழ வேண்டுமே!- நாம்
வாழ்ந்ததைப் பற்றி ஊரார்  புகழ்ந்தே
    பேச வேண்டுமே!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT