சிறுவர்மணி

ஆல்போல் வாழணும்

புலேந்திரன்

மலையைப் போல ஆல மரமும்
    அழகாய்த்  தோன்றுதே - அது
தலைக்கு மேலே கிளைகளை விரித்தே
    குடைபோல் நிற்குதே!

தன்னை நாடி பறந்தே வந்திடும் 
    பறவைகள் அனைத்துமே - மேலே
தங்கிக் கொள்ள தனது கிளையில்
    இடத்தைச் கொடுக்குதே! 

குட்டிக் குட்டியாய் ஆல மரத்தின்
    பழங்கள் இருக்குதே!-அவற்றை
கொத்திக் கொத்தி பறவைகள் தின்றே
    பசியைப்போக்குதே!

ஆல இலையும் ஆடு தின்ன
    உணவாய் ஆகுதே! - பல்லும்
ஆலம் விழுதால் துலக்கி வந்தால்
     உறுதி யாகுதே!

சிறுவர் கட்டி ஊஞ்ச லாட
    சிறிய  விழுதுமே! - தரையில் 
பெரிய விழுதும் ஊன்றி நின்றே
     மரத்தைத் தாங்குமே!

வாழ்ந்தால் ஆல மரத்தைப் போல
    வாழ வேண்டுமே!- நாம்
வாழ்ந்ததைப் பற்றி ஊரார்  புகழ்ந்தே
    பேச வேண்டுமே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT