கூடா ஒழுக்கம்: குறள் பாட்டு
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடிமறைந்தொழுகும் மாந்தர் பலர்.
அறத்துப்பால் அதிகாரம் 28 பாடல் 8
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.
திருக்குறள்
மனத்தில் குற்றம் இருந்திடும்
வெளியில் மாண்பு தெரிந்திடும்
நீரால் சுத்தம் ஆகலாம்
நெஞ்சு சுத்தம் ஆகுமா?
வெளியில் மாண்பு காட்டுவார்
உள்ளே மாசு கொண்டிருப்பார்
மறைந்து மறைத்துப் போலியாய்
வாழும் மாந்தர் ஏராளம்.
- ஆசி.கண்ணம்பிரத்தினம்