அருளுடைமை
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது.
அறத்துப்பால் - அதிகாரம் 25 - பாடல் 8
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
- திருக்குறள்
இன்று பொருள் இல்லாமல்
இன்னலுற்று வாழ்வோரும்
நாளை வளம் பெற்றிடலாம்
நல்ல வாழ்வு வாழ்ந்திடலாம்
அன்பில்லாமல் வாழ்பவர்
பயனில்லாமல் வாழ்வோரே
எக் காலத்திலும் நன்மைகள்
பெறுவதென்பது அரியதே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்