முகப்பு
சிறுவர்மணி

பனித்துளியே

பச்சைப் புல்லின் நுனிமேலே    படிந்து கிடக்கும் பனித்துளியேமெச்சும் உழவன் தலைப்பாகை    போல நீதான் தெரிகின்றாய்!

Updated On : 24 ஜூலை 2022, 6:00 am IST
பகிர்:

பச்சைப் புல்லின் நுனிமேலே
    படிந்து கிடக்கும் பனித்துளியே
மெச்சும் உழவன் தலைப்பாகை
    போல நீதான் தெரிகின்றாய்!

விரிந்த பரந்த காட்சியினை
    சுருக்கிக் காட்டும் கண்ணாடி
அருகில் நிற்கும் பனைமரமும்
    அடங்கி உன்னுள் கிடக்கிறதே!

சோலைச் செடியின் அரும்பைப்போல்
    காலை வேளை பிறக்கின்றாய்
வேலை முடிந்த பூவைப்போல்
    மாலை அழிந்து மறைகின்றாய்!

Advertisement

Advertisement

நீண்டு மறைந்த சூரியனும்
    நாளும் கிழக்கே வருவதுபோல்
மீண்டும் காலை தோன்றுகிறாய்
    பிறப்பு வட்டம் காட்டுகிறாய்!

பலரும் போற்றும் முத்துப்போல்
    பெருமை அழகு தெரிகிறது
தொலைந்து விட்ட சில்லறைபோல்
    உனது உருவம் மறைகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.