சிறுவர்மணி

சிறுவர் பாடல்: விழிப்போடு எதிர்கொள்

மழைக்காலம் வந்தாச்சுமழைப் பொழிவும் தொடங்கியாச்சு!ஆகவே அன்புச் செல்வங்களே!

நா. கிருஷ்ணமூர்த்தி

மழைக்காலம் வந்தாச்சு
மழைப் பொழிவும் தொடங்கியாச்சு!
ஆகவே அன்புச் செல்வங்களே!
சொல்வன கவனமாகக் கேளுங்கள்:

மழையில் நனைவதைத் தவிர்த்துவிட்டால்
சளி காய்ச்சல் வராது கேள்!
பள்ளிக்கும் செல்லலாம் எப்போதும் போல்!

வானில் வெட்டும் மின்னல் ஒளி
விழித்திரையை பதம் பார்க்கும்!
இடிக்கும் பேரிடி ஓசை
செவிப்பறையை சேதமாக்கும்!

மழைநீரில் ஆட்டம் போட்டால்
விரலிடுக்குகளில் புண் படரும்!
எனவே அன்புச் செல்வங்களே!
மழை நாள்களை  விழிப்போடு எதிர்கொண்டால் 
நலமாய் எல்லோரும் இருந்திடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT