அந்திவேளை நெருங்கியாச்சு
அந்திமந்தாரையும் பூத்தாச்சு
சந்திரன் வானில் வந்தாச்சு
நந்தவனம் அமைதியில் ஆழ்ந்தாச்சு!
ஓடையில் நீர் பெருகலாச்சு
மடைமாறி வயலில் பாயலாச்சு
காடை கௌதாரி கூடுகளில் அடைஞ்சாச்சு
காடுகளில் விலங்குகள் உறங்கியாச்சு!
வானில் நட்சத்திரங்கள் தெரியலாச்சு
மனதில் அமைதி நிறைந்தாச்சு
கண்களை இமைகள் மூடலாச்சு
கனவுகளும் மெல்ல வரலாச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.