முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல?

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:


1. மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல?
2.முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை.
3. அரசன் ஆளாத கோட்டைக்கு, பகல் காவல்காரன் ஒருவன்  இரவுக் காவல்காரன் ஒருவன்.
4.  பேச்சுக் கேட்குது, பேசுபவர் தெரியவில்லை.
5. நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான்.
6. சட்டையைக் கழற்ற முயன்றால் கண்ணீரும் கம்பலையும்தான்!
7. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ.
8. பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது.
9. வெள்ளை ராஜாவுக்குக் கருப்புச் சட்டை.


விடைகள்:

1. விழுது  2.  நட்சத்திரங்கள் 3. சூரியன், சந்திரன்  4.  வானொலிப் பெட்டி 5.  முகம் பார்க்கும் கண்ணாடி 6. வெங்காயம் 7. சிரிப்பு 8. கண் 9. உளுந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.