வென்றிட வேண்டும்..
உழைத்தால் நீயும் உயர்வாயென உழைத்து நானும் சொல்வேனே
உழைத்தால் நீயும் உயர்வாயென
உழைத்து நானும் சொல்வேனே
-
தழைபோல் வளர்ந்து செழித்திடவே
மழைபோல் நீயும் வாழ்ந்திட வேணும்
-
குழையும் நட்பில் உறவுகளும்
மகிழ்ந்து உன்னை வாழ்த்திட வேணும்
-
வேழம் போல் வீரம் கொண்டு
கெட்ட தனைத்தும் அழித்திட வேணும்
-
சூழும் உலகில் நீதான் என்றும்
சூதுகள் அழித்து வென்றிட வேணும்!