இசைச் சோலை
* தட்டினால் இசை எழுப்பும் இசைத் தூண்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் ஆகிவயற்றில் உள்ளன. * வயலின் என்றும் பிடில் என்றும் அழைக்கப்படும் மே
* தட்டினால் இசை எழுப்பும் இசைத் தூண்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் ஆகிவயற்றில் உள்ளன.
* வயலின் என்றும் பிடில் என்றும் அழைக்கப்படும் மேலைநாட்டு இசைக்கருவி, பழந்தமிழ் இலக்கியத்தில் "கின்னரி' என்று குறிக்கப்பட்டுள்ளது.
* பிடிலை, நம்நாட்டு இசைக்கருவியாக மாற்றம் செய்து அமைத்துத் தந்தவர் வித்வான் வடிவேலுப்பிள்ளை. அவர் தஞ்சை அரண்மனை இசைப் புலவராக விளங்கியவர்.
* இசைத்தமிழ் பற்றிய ஓர் ஆய்வு நூல் "யாழ் நூல்'. இதனை விபுலானந்த அடிகளார் எழுதியுள்ளார். 1947-ல் கரந்தைத் தமிழ்ச்சங்கம் அதனை வெளியிட்டது. இந்த நூல் பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலை திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என ஏழு பகுதிகளைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான யாழ்களையும், யாழ் உறுப்புகளையும் பற்றி இந்நூல் விரிவாகக் கூறுகிறது.