ஞாயிறு கொண்டாட்டம்

அழகே... அழகே...!

குளிப்பதற்கு முன்னால் எலுமிச்சை சாறை ஒரு பஞ்சில் நனைத்துக்

ஆர். ஜெயலட்சுமி

* இரவு படுக்கும் முன்பு பால் ஏட்டை முகத்தில் தடவிக் கொண்டு, காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் சருமம் பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.

* குளிப்பதற்கு முன்னால் எலுமிச்சை சாறை ஒரு பஞ்சில் நனைத்துக் கன்னத்தில் தேய்த்தால் பருக்கள் மறையும்.

* செம்பருத்திப் பூவின் சாறையும், நல்லெண்ணெயையும் சம அளவில் கலந்து கொண்டு ஓர் அகலமான பாத்திரத்தில் விட்டு தண்ணீர் வற்றும் வரை காய்ச்சி பின்னர் அத்தைலத்தை கூந்தலுக்கு உபயோகித்தால் கூந்தல் செழித்து நீண்டு வளரும்.

* ரோஜாப் பூவின் இதழ்களை சந்தனம் சேர்த்து அரைத்து, அதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழுவி வந்தால் சில வாரங்களிலேயே முகத்தில் உள்ள கறுமை நிறம் மறைந்து பட்டுப் போல மாறிவிடும்.

* தேங்காய் எண்ணெயில் காய்ந்த வேப்பம் பூவைப் போட்டு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT