பெருந்தன்மை!
ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஒருமுறை நாகர்கோவில் சென்றார்.
ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஒருமுறை நாகர்கோவில் சென்றார்.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அப்போது நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். அவர் ராஜாஜியின் நண்பர்.
ராஜாஜி நண்பரைப் பார்க்க ஆவல் கொண்டார். அதற்கு ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
""நீங்கள் ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். நான் போய் அவரை இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்'' என்றார் அதிகாரி.
""அவர் கவிஞர் எனது நண்பர். அவரை அவர் இல்லத்திற்குப் போய் சந்திப்பதுதான் முறை'' என்றார் ராஜாஜி.