ஞாயிறு கொண்டாட்டம்

சுத்தமஹான வீட்டிற்கு டிப்ஸ்

கண்ணாடி, நிலைக்கண்ணாடி பீரோ எதுவாக இருந்தாலும் அதன் மேல் டால்கம் பவுடர் தூவி ஈரமில்லாத துணியால் துடைக்கத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். அதுபோல் டிஷ்யூ பேப்பர் கொண்டு கண்ணாடிக் கதவுகளைத் துடைத்தால் அவை பளிச்சென்று ஆகிவிடும்.

சீதாலெட்சுமி

கண்ணாடி, நிலைக்கண்ணாடி பீரோ எதுவாக இருந்தாலும் அதன் மேல் டால்கம் பவுடர் தூவி ஈரமில்லாத துணியால் துடைக்கத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். அதுபோல் டிஷ்யூ பேப்பர் கொண்டு கண்ணாடிக் கதவுகளைத் துடைத்தால் அவை பளிச்சென்று ஆகிவிடும்.

வீட்டில் வாசற்படி ஜன்னல் கதவுகளில் உள்ள அழுக்கைத் துணியில் கெரோசினைத் தொட்டுத் தடவி ஒரு நிமிடம் ஊறவிட்டு பின் வேறு துணி கொண்டு துடைத்தால் அழுக்கு வந்துவிடும்.

பீரோ பளபளக்க, முதலில் பழைய துணியினால் தூசியைத் துடைத்துவிட்டு சிறிதளவு பஞ்சு அல்லது ஸ்பாஞ்சை தேங்காய் எண்ணெயில் நனைத்து பீரோவைத் துடைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பஞ்சால் துடைக்க பீரோ பளபளக்கும்.

பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை மெல்லிய வெள்ளைத் துணியால் துடைத்து வைக்கவும். பூஜை அறை பளிச்சென்று இருக்கும்.

கண்ணாடி மேஜை மீதுள்ள கறைகள் நீங்குவதற்கு டால்கம் பவுடர் அல்லது கடலை மாவைத் தூவி பிறகு நன்றாகத் துடைத்து விடவும். கறைகள் அகன்று விடும்.

வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவி விடுங்கள். பல நாள்களுக்கு வீட்டில் எறும்புப் புற்றே வைக்காது.

ஒரு பக்கெட் தண்ணீரில் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு இரண்டு மேசைக் கரண்டி அளவு கலந்து "மாப்' கொண்டு வீட்டைத் துடைத்தால் தரை பளபளக்கும்.

சமையல் அறையில் கேஸ் அடுப்புக்குப் பின்புறம் ஒட்டப்பட்டிருக்கும் டைல்ஸ் எண்ணெய்ப் பிசுபிசுப்புடன் அழுக்கேறியிருக்கும். சோப்புத் தூளுடன் சமையல் சோடாவைக் கலந்துகொண்டு "ஸ்க்ரப்' மூலம் தொட்டுத் தேய்க்க டைல்ஸில் உள்ள கறைகள் நீங்கிவிடும். பிறகு நன்கு பிழிந்த ஈரத்துணியைக் கொண்டு துடைப்பதன் மூலம் டைல்ஸ் மினுமினுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 25 பலி, 59 பேர் படுகாயம்

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

SCROLL FOR NEXT