முதலில் நடையின் பெருமையை அறிந்து கொள்வோம்:
- நரம்புகள் வலுவடைகின்றன. இதன் பலன் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.
- வெளியில் நடப்பதால் நல்ல காற்றோட்டத்தை அனுபவிக்கலாம், இதனால் கூடுதல் ஆக்ஸிஜன் கிடைத்து, நமது உடலில் உள்ள கெட்ட ரசாயனங்களை வெளியேற்றுகிறது.
- ரத்த ஓட்டம் சீராகிறது. இருதயம் வலுபெறுகிறது, சீராகிறது.
- தினமும் காலை அல்லது மாலை 40 நிமிடங்கள் நடப்பதால் சுறுசுறுப்படைந்து மேலும் சிறப்பாகச் செயல்பட முடியும்.
- இனி நடைப்பயிற்சியை வைத்து
- எடையைக் குறைக்க என்னென்ன
- செய்ய வேண்டும் என பார்ப்போம்:
- தினமும் குறைந்தது 15,000 அடிகளாவது நடக்க வேண்டும்.
- தினமும் மூன்று தடவை, 20 நிமிடங்கள் நடக்க முயற்சி செய்யுங்கள். நீண்ட நடையை விட இது சிறந்தது.
- உயர்ந்து செல்லும் வழிகளில் நடப்பது ரொம்ப நல்லது. முதலில் கஷ்டமாக இருக்கும். ஆனால் பழகியபின், வேகத்தை அதிகரிக்கலாம்.
- நடப்பதற்கு முன் பச்சை தேநீர் அருந்தவும். இதன் மூலம் நமது உடலில் உள்ள கூடுதல் கிலோ கலோரிகளை எரிக்க இயலும்.
- நடக்கும்போது நடுநடுவே, ஒவ்வொரு நிமிட இடைவெளி விடுவது மேலும் நல்லது.
- நடக்கும்போதே, கை கால்களை தூக்கி இறக்கி, உட்கார்ந்து எழுந்து இருபக்கமும் உடலை அப்படியும் இப்படியும் அசைப்பது போன்றவற்றையும் மேற்கொண்டால், இருதய துடிப்பு அதிகமாவதுடன், நிறைய கலோரிகளும் எரிந்து எடை குறைய வாய்ப்பு ஏற்படும்.
- சர்க்கரை கலந்த குளிர்பானங்களைத் தவிர்க்கவும். குறிப்பாக உடற்பயிற்சிக்கு பின்பு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மீறி அருந்தினால், எரிந்த கலோரிகளை விட கூடுதலாக கலோரிகள் சேர்ந்துவிடும்.
- சுறுசுறுப்பாக நடப்பது நலம். வெறுமென நடக்க வேண்டும் என்று நடக்காதீர்கள். சுறுசுறுப்பாக நடப்பதன் மூலம் இடுப்புப் பகுதி கரைந்து மேலும் எடுப்பாகத் தெரிய வாய்ப்புகள் அதிகம்.