சமீபத்தில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கருக்கு 70 வயது துவங்கியது.
இன்றும் சுனில் கவாஸ்கர் பேசப்படுகிறார் என்றால், அதற்கு காரணம் இந்த சாதனைகள்.
உலகில் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் கவாஸ்கர் தான்.
அது நாள் வரை ஆஸ்திரேலியாவின் டான் ப்ராட்மேன், டெஸ்ட் போட்டிகளில் அடித்த 28 சதம் தான் முதன்மையாக இருந்தது. அதனை முறியடித்து 29 சதம் அடித்து புதிய சாதனை படைத்தார்.
1985-ஆம் ஆண்டு உலக சேம்பியன் ஷிப் ஆப் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடந்த போது, இந்தியா கோப்பையை வென்றது. அப்போதைய இந்திய கேப்டன் கவாஸ்கர் தான்.
1974-ஆம் ஆண்டு கான்பூர் வியாபாரியின் மகள் மார்ஷெலியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரை மைதானத்தில் காண்பது மிகவும் ஆபூர்வம்.
1983-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை இந்தியா வென்றது. இதில் வென்று நாடு திரும்பிய கவாஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மும்பையில் நிதி
வசூலித்து தந்தார்.
இவருடைய மகன் ரோகன் மொத்தமே 11 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடினார். மேற்கு இந்திய தீவுகளில் கிரிக்கெட்டர் ரோகன் கென் காயின் விசிறி கவாஸ்கர். அவர் பெயரை தன் மகனுக்கு வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.