எனக்கு வயது 30!
ஒரு முறை கலாம் பிறந்த நாள் வந்தது. அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் 80-ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள் என்றார்கள். அதற்கு கலாம் "என்ன 80 வயது முதியவர் என்கிறீர்கள். எனக்கு 30 வயது தான் ஆகிறது' என்றார்.
ஒரு முறை கலாம் பிறந்த நாள் வந்தது. அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் 80-ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள் என்றார்கள். அதற்கு கலாம் "என்ன 80 வயது முதியவர் என்கிறீர்கள். எனக்கு 30 வயது தான் ஆகிறது' என்றார்.
உடனே நண்பர்கள் சிரித்துக்கொண்டே "எப்படி 30 வயது என்று சொல்கிறீர்கள்' என்றார்கள்.
அதற்கு கலாம் சொன்னார். "1980-ஆம் ஆண்டு ரோகிணி ஏவுகணையை முதன்முதலாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினேன். அன்றைய தினம் தான் இந்த அப்துல்கலாம் என்பவர் யார் என்றே இந்த உலகிற்கு தெரியவந்தது. அன்றிலிருந்து இன்று வரை கணக்கிட்டு கொண்டால் 30 ஆண்டுகள் தான் ஆகிறது. அதனால் எனக்கு வயது 30 என்று குறிப்பிட்டேன்' என்றார்.
ஒரு மனிதர் என்று சாதிக்கிறாரோ அன்று தான் அவர் பிறந்ததாகவே கருத வேண்டும் என்கிறார். இளைஞர் ஒவ்வொருவரும் உலகில் புதிதாய் பிறந்து சாதித்து சரித்திரம் படைக்க வேண்டும் என்கிறார் கலாம்.