தீப்பெட்டிக்குள் சேலை.!
தீப்பெட்டிக்குள் சேலை என்பது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் இளைஞர் ஒருவர்.
தீப்பெட்டிக்குள் சேலை என்பது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் இளைஞர் ஒருவர்.
சங்க காலங்களில் மோதிரத்திற்குள் நுழையும் சேலை போன்ற ஆடைகள் நெய்யப்பட்டன. ஈராக்கில் நெய்யப்பட்ட மஸ்லின் எனப்படும் துணிவகை மிகவும் மென்மையாகவும் உள்ளங்கைக்குள் அடக்கிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு நூல் இழைகள் மெலிந்து சன்னமாக இருக்கும்.
தெலங்கானாவைச் சேர்ந்த "நல்ல விஜய்' என்னும் நெசவாளி தீப்பெட்டிக்குள் அடங்கும் சேலையை நெய்துள்ளார்.
Advertisement
Advertisement
ஐந்தரை மீட்டர் நீளமுள்ள சேலையை மடித்து ஒரு பெரிய தீப்பெட்டிக்குள் வைத்துவிடலாம்.இந்த சேலை இயற்கையான பட்டு நூலால் நெய்யப்பட்டது. இயற்கை சாயம் ஏற்றப்பட்டது. இந்த சேலையை உடுத்தவும் செய்யலாம்.
அமெரிக்க அதிபர் ஒபாமா 2015-இல் தன் மனைவியுடன் இந்திய வருகை தந்த போது அவருக்கு தீப்பெட்டியில் ஒரு சேலையை வைத்து நல்ல விஜய் பரிசளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.