'கடவுளின் சொந்த நாடு' என்றழைக்கப்படும் கேரளத்தில் ஆண்டு முழுவதும் பசுமையைப் போர்த்திக் கொண்டிருக்கும் 'குமரகம்' எனும் கிராமம் ரிஸார்ட்டுகளுக்கும், நட்சத்திர விடுதிகள், படகு வீடுகளுக்கும் உலகப் பெயர் பெற்றது. இங்கு தீவாக மாறியிருக்கும் உப்பங்கழிகளில் படகு சவாரி செய்யாவிட்டால் சுற்றுலா நிறைவு பெறாது.
இங்கு மாலை வேளைகளில் இரு ஆண்டுகளாக 'வள்ளம்' எனப்படும் சிறு படகில் தேநீர், நாட்டுப்புறத் தின்பண்டங்களைத் தயாரித்து சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் சாந்தகுமாரி பிரசித்தம். ஏழுபத்து மூன்று வயதிலும் சிறு படகை துடுப்பு போட்டு துழாவி ஒட்டிக் கொண்டு படகிலேயே தேநீர் தயாரித்து வழங்கி வருகிறார்.
கரை ஓரங்களில் நின்று, படுத்து, நடந்து, ஓடி, சைக்கிள் ஒட்டி, உடற்பயிற்சி செய்து நேரத்தைப் போக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சூடாக அந்த இடத்திலேயே தேநீர் கிடைப்பது அரிது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.