ஞாயிறு கொண்டாட்டம்

ரூபாய் நோட்டுகளில் கோடுகள் ஏன்?

இந்தியாவில் நாம் ஒவ்வொரு நாளையும் பணத்தைத் தொடாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது.

தினமணி


இந்தியாவில் நாம் ஒவ்வொரு நாளையும் பணத்தைத் தொடாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது.  ரூ.10 முதல் ரூ.500 வரையில் பல மதிப்பிலான பணத்தை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.

ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் பல்வேறு சாய்வான கோடுகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு என்ன காரணம் தெரியுமா? 

உன்னிப்பாகக் கவனித்தால், ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் பல்வேறு சாய்வான கோடுகள் வரையப்பட்டிருக்கும். 

இந்தக் கோடுகள் "ப்ளீட் மார்க்ஸ்' என்று அழைக்கப்படும்.  இது நோட்டுகளின்  மதிப்புக்கேற்ப கூடும் அல்லது குறையும். 

நோட்டைப் பார்த்து நாம் மதிப்பை அறியலாம். ஆனால், பார்வையற்றோர் இந்தக் கோடுகளைத் தேய்த்துப் பார்த்து, அறிவதற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவைதான் இவை. 

நோட்டுகளை உருவாக்கியவர்கள் பார்வையற்றவர்களின் வசதிக்காகவே இந்தக் கோடுகளையும் உருவாக்கி இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

நாகலாபுரம் ஸ்ரீ வேத நாராயண சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்!

லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

மயிலாடுதுறை: 12 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அங்காளம்மன் சிலை தென்குடிக்கு அனுப்பி வைப்பு

3 நாட்டுத் துப்பாக்கி, குண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT