250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!
சாம் சிஎஸ்-ன் புதிய திரைப்படம் குறித்து....
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தன் புதிய திரைப்படத்திற்காக 250 இசைக் கலைஞருடன் பணியாற்ற உள்ளாராம்.
விஷ்ணுவின் 10 அவதாரங்களைத் திரைப்படமாக்கும் முயற்சியின் இரண்டாவது அவதாரத்திற்கான அறிவிப்பை அண்மையில் ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதன்படி, பரசுராம் அவதாரம் முழு விஎஃப்எக்ஸ்-ல் திரைப்படமாகிறது.
முதல் பாகமான மகா அவதார் நர்சிம்மா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது போல் இப்பாகமும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அஸ்வின் குமார் இயக்கத்தில் தயாராகும் இப்படம் பான் இந்திய மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. சாம் சிஎஸ் இயக்கவுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்திற்காக சாம் சிஎஸ் உலகளவிலுள்ள 250 இசைக்கலைஞர்களை வைத்து இசைப் பணியை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இசை ரீதியாகவும் இப்படம் கவனிக்கப்படலாம் என்றே தெரிகிறது.