முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

டேக்வாண்டோவில் அசத்தல்

தெற்காசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர்.

Updated On : 3 செப்டம்பர் 2023, 12:00 am IST
பகிர்:


தெற்காசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர்.

இந்திய டேக்வாண்டோ சங்கம், தெலங்கானா மாநில டேக்வாண்டோ சங்கம் ஆகியன சார்பில் ஹைதராபாதில் 7-ஆவது தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 14 வயதில் இருந்து பல்வேறு வயதுப் பிரிளகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யு.ஏ.இ.யைச் சேர்ந்த 1,000-கக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஸ்பேரிங், பவர் பிரேக்கிங், செல்ஃப் டிபன்ஸ் உள்ளிட்ட பிரிளகளில் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

ஸ்பேரிங் பிரிவில் குருஷந்த், திபேஷ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். அனீஸ், மிதுன் ஆகியோர் அதே பிரிவில் தலா 1 வெள்ளியை கைப்பற்றினர்.

இன் பேட்டர்ன் பிரிவில் திபேஷ், குருஷந்த் தலா 1 வெண்கலமும், ஸ்பேரிங் பிரிவில் தேவராஜ், சந்துரு தலா 1 வெண்கலமும் வென்றனர். தெற்கு, மேற்கு இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 34 பேர் பங்கேற்றனர். இதில் தமிழக அணியினர் 6 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.

சிறப்பிடம் பெற்ற தமிழக அணிக்கு எம்.கே. சுரேஷ் குமரன், மஞ்சுளா தேவி ஆகியோர் தீவிர பயிற்சியை அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments