புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்கு ஆகாதே
பாம்பறியும் பாம்பின கால். (பாடல்-5)
நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே! பாம்பினுடைய கால்களைத் தமக்கு இனமாகிய பாம்புகளே அறியுந் தன்மையுடையன. அதுபோல், அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் தெரிந்துகொள்ளும் திறம், (அவர்கள் போன்ற) அறிவிற் சிறந்தவர்களுக்கே விளங்கும், கல்வியறிவில்லாதவர்களுக்கு விளங்காது. (க-து.) கற்றோர் பெருமையைக் கற்றோர் அறிவார்.
"பாம்பின் கால்களைப் பாம்புகளே அறியும்' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.