தமிழ்மணி

பழமொழி நானூறு

தினமணி

அறிவுடையார் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளார்
 சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
 அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
 ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும் சீர்ந்தது செய்யாதா ரில். (பா-67)
 வெற்றியை உடைய கருடன் மீது ஏறி வீற்றிருந்து, உலகத்தைத் தாவியளந்த பெருமை பொருந்திய திருமாலே யாயினும், தனக்கு ஊதியந்தரும் சீரியதொன்றைச் செய்யாதொழிய விடுவார் இல்லை. (ஆகையால்) அறிவிற் சிறந்தோர், உறவினர், நட்பினர் என்பன கொண்டு சென்று, மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் அவருள் ஒருவரையும் தெளிதல் இலர். (க-து) மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் யாவராயினும் நம்புதல் கூடாது. "சீர்ந்தது செய்யதார் இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT