தமிழ்மணி

 ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்

தினமணி

பழமொழி நானூறு
 கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
 ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
 பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்
 திருவொடும் இன்னாது துச்சு. (பாடல்-123)
 கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் துன்பந் தருவதாம். (அதுபோல), கருவினுள் தங்கியபொழுதே தொடங்கிக் கலந்தவர்களும், தமக்குள்ளே ஓர் இடத்தில் நீண்டநாளும் ஒருங்கே தங்கியிருந்து வாழுதல் துன்பம் தருவதாம். (க-து.) உடன்பிறந்தாராயினும் ஒரே இடத்தில் நீண்டநாள் தங்கியிருத்தல் ஆகாது. "திருவொடும் இன்னாது துச்சு' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT