பழமொழி நானூறு முன்றுறையரையனார்
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:10 PM
ஈதல், துய்த்தல் இல்லாதான் செல்வம்
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம், - தழங்கருவி
Advertisement
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம். (பாடல்-151)
முழங்குகின்ற அருவிகளையுடைய, மூங்கில் முதிா்ந்து முத்துக்களைக் கொட்டுகின்ற மலையை யுடையவனே! பிறா்க்கீதலும், தான் அடைதலும் முதலியன அறியாதான் கொண்டிருக்கின்ற முழக்குகின்ற முரசினை உடைய செல்வம், நாய் பெற்ற தேங்காயை அஃது ஒக்குமல்லவா? (க-து.) ஈதல் துய்த்தல் இல்லாதான் பெற்ற மிகுந்த செல்வம் பயனின்றிக் கழியும். ‘நாய்பெற்ற தெங்கம்பழம்’ என்பது பழமொழி.