பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
ஒரு வேலையைச் செய்வதற்குத் தகுதியுடையவர் என்று நியமித்துவிட்டு, அவர் பேச்சில் சந்தேகப்பட்டு, அவரிடம் எவ்விதமான விளக்கமும் கேட்காமலேயே அவரைப் பொறுப்பிலிருந்து நீக்குதல் மிகவும் கீழான பண்புக்குப் பொருந்த
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM
உறுமக்க ளாக ஒருவரை நாட்டி
பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல்
சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை; அதுவே,
குறுமக்கள் காவு நடல் (பாடல்-172)
ஒரு வேலையைச் செய்வதற்குத் தகுதியுடையவர் என்று நியமித்துவிட்டு, அவர் பேச்சில் சந்தேகப்பட்டு, அவரிடம் எவ்விதமான விளக்கமும் கேட்காமலேயே அவரைப் பொறுப்பிலிருந்து நீக்குதல் மிகவும் கீழான பண்புக்குப் பொருந்திய செயலாகும். "அது' சிறு பிள்ளைகள் சோலை நடுவதாகச் சொல்லி செடிகளைப் பெயர்த்துப் பெயர்த்து நட்டு விளையாடுவதைப் போன்றதாகும். "குறுமக்கள் காவு நடல்' என்பது பழமொழி.