ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய 'பாகிஸ்தான் பலூன்' கண்டெடுப்பு!
ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் பலூன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் பலூன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் அருகே பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்ற வாசகம் எழுதப்பட்ட விமான வடிவிலான சந்தேகத்திற்குரிய பலூன் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உள்ளூர்வாசி ராஜ்குமார் கூறுகையில், பலோஹ் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சனிக்கிழமை காலை இந்த சந்தேகத்திற்கிடமான பலூனைப் பார்த்ததாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பின்னர் அவர்கள் உடனடியாக தலாய் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த பலூனைப் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
மற்றொரு உள்ளூர்வாசியான ராஜேஷ் கௌதம், அந்த பொருள் விமான வடிவிலான பலூன் என்றும் அதில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்ற வார்த்தைகள் தெளிவாகத் தெரிந்ததாகவும் விவரித்தார். இதுகுறித்து போலீஸாரும் நிர்வாகமும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஹிமாச்சப் பிரதேசத்தில் இதுபோன்ற பலூன் கண்டெடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. உனா மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் அவ்வப்போது இதுபோன்ற பலூன்கள் கண்டறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
A suspicious "airplane-shaped balloon" bearing the inscription "Pakistan International Airlines" was spotted in the fields near a village here on Saturday, according to locals.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.