சௌதி அரேபியா - பாகிஸ்தான் இடையே வணிக மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்!
சௌதி அரேபியா - பாகிஸ்தான் இடையே வணிக மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்!
சௌதி அரேபியா - பாகிஸ்தான் இடையே வணிக மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
கராச்சி துறைமுக அறக்கட்டளையின் கடல்சார் பகுதிக்குள்பட்ட 140 ஏக்கர் நிலத்தை வணிக பயன்பாட்டுத் தளமாக மாற்றும் பணிகளுக்காக சௌதி அரேபியாவைச் சேர்ந்த சௌதி பிசினஸ் கவுன்சிலா நிறுவனம், ஆரிஃப் ஹபீப் டால்மென் ஆர்.இ.ஐ.டி. மேனேஜ்மெண்ட் லிமிடட் (ஏ.எச்.டி.ஆர்.எம்.எல்.) மற்றும் கராச்சி துறைமுக அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது. இந்தத் தகவலை பாகிஸ்தானின் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் ஜுனைட் அன்வர் சௌத்ரி ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 7) தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட திட்டத்தால், அப்பகுதி நகர்ப்புற மேம்பாட்டை நோக்கி நகர்வதுடன் அப்பகுதியில் வேலைவாய்ப்பு பெருகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement