பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரே ஆனாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனம் மகிழலாகாது. அப்படிப் பேசுவதை உடனே தடுத்துவிட வேண்டும்.
தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமராது அதனை அகற்றலே வேண்டும்.
அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம். (பாடல்232)
மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரே ஆனாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனம் மகிழலாகாது. அப்படிப் பேசுவதை உடனே தடுத்துவிட வேண்டும். தம்முடையனவே என்றாலும், பொருத்தமில்லாத ஆபரணங்களை எவரும் அணிவதில்லை அல்லவா? "அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி.