முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தேங்கி நின்ற நீரானது வற்றிப்போனதென்றால் அதனைச் சார்ந்து வாழ்ந்தனவெல்லாம் வாழ வகையற்று அழிந்து கெடும்; திரியும், இடிஞ்சிலும், நெய்யும் சார்வாகவே சுடரும் அழகாக எரியும்; அவை இன்றேல் அழிந்துபோம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:


திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரேர் அனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
நீரற நீர்ச்சார்வு அறும். (பாடல்-219)


தேங்கி நின்ற நீரானது வற்றிப்போனதென்றால் அதனைச் சார்ந்து வாழ்ந்தனவெல்லாம் வாழ வகையற்று அழிந்து கெடும்; திரியும், இடிஞ்சிலும், நெய்யும் சார்வாகவே சுடரும் அழகாக எரியும்; அவை இன்றேல் அழிந்துபோம். அதுபோலவே ஆராயுமிடத்துப் பிறப்புக்குச் சார்வாயுள்ள மற்றையன எல்லாம் அற்றுப்போகவே, அந்த அற்றுப்போன தன்மையானது, விரைந்து அவனுடைய பிறப்பினையும் அறுக்கும் சக்தியாகிவிடும். "நீரற நீர்ச்சார்வு அறும்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments