தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தேங்கி நின்ற நீரானது வற்றிப்போனதென்றால் அதனைச் சார்ந்து வாழ்ந்தனவெல்லாம் வாழ வகையற்று அழிந்து கெடும்; திரியும், இடிஞ்சிலும், நெய்யும் சார்வாகவே சுடரும் அழகாக எரியும்; அவை இன்றேல் அழிந்துபோம்.

தினமணி


திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரேர் அனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
நீரற நீர்ச்சார்வு அறும். (பாடல்-219)


தேங்கி நின்ற நீரானது வற்றிப்போனதென்றால் அதனைச் சார்ந்து வாழ்ந்தனவெல்லாம் வாழ வகையற்று அழிந்து கெடும்; திரியும், இடிஞ்சிலும், நெய்யும் சார்வாகவே சுடரும் அழகாக எரியும்; அவை இன்றேல் அழிந்துபோம். அதுபோலவே ஆராயுமிடத்துப் பிறப்புக்குச் சார்வாயுள்ள மற்றையன எல்லாம் அற்றுப்போகவே, அந்த அற்றுப்போன தன்மையானது, விரைந்து அவனுடைய பிறப்பினையும் அறுக்கும் சக்தியாகிவிடும். "நீரற நீர்ச்சார்வு அறும்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT